இடையில் நான் படித்த மூன்று விதமான புத்தகங்கள் குறித்து நான் சொல்லியாக வேண்டும். இவற்றில் ஒரு புத்தகம் மனித வாழ்க்கை மீது வெறுப்பையும் அடுத்த புத்தகம் மனித வாழ்வை சவாலாக வும் அடுத்த புத்தகம் மனித வாழ்வின் அழகையும் சொல்ல கூடியது.
credit: My own Photography
படம் : பற்றி எரியும் பாக்தாத் புத்தக முன்பக்கம்
1.பற்றி எரியும் பாக்தாத்
அமெரிக்க அரசு தீவிரவாதியை பிடிக்கிறேன் என ஈராக்கிற்குள் சென்று அங்கு பொதுமக்கள் மீது என்ன மாதிரியான வன்முறையை பயன்படுத்தியது. அந்த மக்கள் எவ்வளவு கொடுமைகளை அனுபவித்தனர். என்பதை பாக்தாத்தில் வசிக்கும் ஒரு பெண்ணின் பார்வையில் சொல்லும் நூல்.
2.தேவியின் சாபம்
ஹிந்தியின் புகழ்பெற்ற எழுத்தாளர் சத்யஜித் ரே பெலூடா கதை வரிசை என்னும் துப்பறியும் நாவல்களை எழுதினார். இதைபற்றி தனியாகவே ஒரு கட்டுரை போட வேண்டும். அப்படியான ஒரு கதை வரிசை பெலூடா
3.ரசவாதி
ஆங்கில எழுத்தாளர் பாலோ கொயலோவால் எழுதப்பட்டு லட்சகணக்கில் பிரதிகள் விற்ற புத்தகம் ரசவாதி. ஆடு மேய்க்கும் இடையனான சாண்டியாகோ தன் வாழ்க்கை முழுவதையும் தனக்கானதாகவும் இந்த வாழ்க்கையையும் பூமியையும் ரசித்தப்படியே வாழும் ரசவாதி. இந்த புத்தகத்தை முடிக்கையில் வாழ்க்கை எவ்வளவு அழகானது என நமக்கு புரிந்திருக்கும்.
Leave a comment